இந்தப் பருவத்தில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 20,000 ரூபாய்க்கு உட்பட்டு திரும்பப்பெறாத நிதியுதவியை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும், அதிகபட்சமாக ஒரு ஹெக்டேர் அல்லது அதற்கும் குறைவான விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் சிறுபோக நெற்செய்கையாளர்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவும் அதேவேளை ஒரு ஹெக்டேருக்கு மேல் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 20,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கிணங்க ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் ஊடாக நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு மாத்திரமே இந்த நிதியுதவி வழங்கப்படுவதோடு குறித்த பணம் விவசாயிகளின் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் எனவும் விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்தப் பருவத்தில் பயிரிடப்படும் நெல் அளவு 08 லட்சம் ஹெக்டேர் எனவும் குறித்த பணமானது நெல் பயிர் செய்யும் விவசாயிகளுக்கும் பூந்தி உரம் அல்லது MOP வாங்குவதற்கு வழங்கப்படுவதாக மேலும் அமைச்சர் தெரிவித்துள்ளார் .
இதன்படி, இதற்காக செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ள தொகை 08 பில்லியன் ரூபா எனவும், 12 இலட்சம் விவசாய குடும்பங்கள் இந்த நன்மையை பெறவுள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.