அரச அதிகாரிகள் மக்களுக்குச் சேவை செய்யாமல் மக்களை இழுத்தடிக்காமல் உங்கள் பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று (22) முற்பகல் நடைபெற்ற நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்..
இதேவேளை, தம்மிடம் முன்வைக்கப்பட்ட சுமார் 50% மக்களின் பிரச்சினைகளை அரச அதிகாரிகளினால் தீர்க்க முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி கொழும்பில் இருந்து வரவேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்தார்.
அத்தோடு, நுவரெலியா மாவட்டத்தில் காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அறிக்கையை எதிர்வரும் பெப்ரவரி 04 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து அரச நிறுவனங்களும் இணைந்து தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
மெங்கும், நுவரெலியா மாவட்டத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், லோகாந்தயாவைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக பட்டிப்பொல மற்றும் பொரலந்த இடையே கேபிள் கார் திட்டத்தை ஆரம்பிக்கவும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.