பம்பலப்பிட்டி ஸ்கெல்டன் வீதி பகுதியில் உள்ள கோடீஸ்வர வர்த்தகரின் வீட்டில் சுமார் 25 கோடி ரூபா, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயங்கள், தங்கம், வெள்ளி, முத்துக்கள் மற்றும் கைத்துப்பாக்கி என்பவற்றை திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், ஹொகந்தர கோமண, பெல்லா, விரிந்து ருவன், களுமல்லி ஆகிய பெயர்களில் அழைக்கப்படும் நாட்டின் பதிவுக் குற்றவாளியான ஜெயக்கொடியைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, சந்தேகநபர்கள் இருவராலும் திருடப்பட்ட வீட்டில் இருந்து 380 கிலோகிராம் தங்க நகைகள், 174 இலட்சம் ரூபா, 10,000 அமெரிக்க டொலர்கள், 950,000 ஜப்பானிய யென், பெறுமதியான கைக்கடிகாரங்கள், இரத்தினக் கற்கள் மற்றும் கைத்துப்பாக்கி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்தோடு, பொலிஸாரின் விசாரணைகளின் போது, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கோமனா தனது நண்பர்களுக்கு ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்களை விநியோகித்துள்ளதாகவும் குறித்த வியாபாரியின் வீட்டில் திருடப்பட்ட மேலும் திருடப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்யும் நோக்கில் சந்தேகநபர்கள் இருவரிடமும் நீண்ட நேர விசாரணைகள் நடத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தத்துள்ளனர்.