கொழும்பில் உள்ள மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் 16.595 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்கா, ஸ்பெயின், கனடா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் இருந்து இலங்கையில் உள்ள போலி தபால் முகவரிகளுக்கு குறித்த பார்சல்கள் அனுப்பப்பட்டுல்லாதாகவும், பொம்மைகள் மற்றும் உணவுப் பொருட்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகத்திற்கிடமான 07 பொதிகள் கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் பரிசோதிக்கப்பட்ட போதே கைப்பெற்றப்பட்டுள்ளது .
அத்தோடு, இந்த பார்சல்களில் 4,673 கிராம் எடையுள்ள அமெரிக்க கஞ்சா “குஷ்” மற்றும் 4,009 கிராம் ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.