26ஆம் திகதி கடவுசீட்டினை முன்பதிவு செய்பவர்களுக்கு ஒரு செய்தி எதிர்வரும் திங்கட்கிழமை (26ஆம் திகதி) பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளமையினால், எதிர்வரும் திங்கட்கிழமை (26ஆம் திகதி) நேரத்தைப் பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அந்த வாரத்தின் எஞ்சிய நான்கு நாட்களுக்கான திகதியும் நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், 26.12.2022 திங்கட்கிழமை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் அல்லது பிராந்திய அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய அறிவித்துள்ளார்.