எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப் பெட்டிகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.
இதன்படி, குறித்த வாக்குப் பெட்டிகள் தயாரிப்பில் கவனத்தை செலுத்தியுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதுள்ள வாக்குப்பெட்டிகளை ஆய்வு செய்யும் பணிகளையும் ஆரம்பித்துள்ளதோடு, அவ்வாறு பயன்படுத்த முடியாத பெட்டிகளை அகற்றிவிட்டு புதிய வாக்குப்பெட்டிகளை தயாரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இந்த வாரம் வெளியிடப்பட உள்ளதோடு, உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தின் 26வது பிரிவின் பிரகாரம் தேர்தலை நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது.