
கண்டி, அக்குரணை, துனுவில பிரதேசத்தில். வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 16 வயது சிறுவனும் 18 வயதுடைய சிறுமியும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, மாவனெல்லையில் இருந்து ஹெம்மாதகம ஊடாக கம்பளைக்கு செல்லும் பிரதான வீதி முக்கால்வாய் பகுதியிலிருந்து மூடப்பட்டுள்ளது.
ஆபத்தான சூழ்நிலையை கருத்திற் கொண்டு பொலிஸார் பல வாகனங்களை வழிமறித்துள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், மாவனல்லையில் இருந்து கம்பளை, நாவலப்பிட்டி, நுவரெலியா ஆகிய பகுதிகளுக்கு குறுகிய பாதையாக ஹெம்மாதகம, கம்பளை வீதி பயன்படுத்தப்படுவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, கண்டி பிரதேசத்தில் இன்று காலை முதல் பெய்து வரும் மழையினால் கண்டி புகையிரத நிலையம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
அத்துடன் கண்டி மற்றும் மஹையாவ புகையிரத நிலையங்களுக்கு இடையிலான வீதியில் மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளதுடன் கெலி ஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் பாதையும் நீரில் மூழ்கியுள்ளதாக குறு டிவி செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், இந்த மோசமான காலநிலை காரணமாக பதுளை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரை காலை 10:15க்கு இயக்கப்படவிருந்த புகையிரதமும், மதியம் 12:40 மணிக்கு கொழும்பு கோட்டை நிலையத்தில் இருந்து நானுஓயா வரையான புகையிரதமும் இரத்து செய்யப்பட்டுள்ளதா தெரிவிக்கப்பட்டுள்ளது.