நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை கிழக்கு கடற்பரப்பில் இருந்து தீவுக்குள் பிரவேசித்து இலங்கை ஊடாக ஊடுருவி வருவதனால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷிரோமணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.