வத்தளை ஹடல சந்தி பகுதியில் பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், முச்சக்கரவண்டியில் பயணித்த சிலர் அலகந்த வீதியிலிருந்து கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் பிரவேசித்த போது போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாகனத்தை நிறுத்தி சோதனையிட முற்பட்டுள்ளனர்.
அப்போது, முச்சக்கரவண்டியின் சாரதியும் அதில் பயணித்த இருவரும்மதுபோதையில் இருந்ததால் சாரதியை கைது செய்ய பொலிஸார் முயற்சித்துள்ளனர்.
அப்போது, முச்சக்கரவண்டியில் வந்த மற்றைய இருவரும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரையும் தாக்கிவிட்டு முச்சக்கரவண்டியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் வத்தளை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததையடுத்து மற்றுமொரு பொலிஸ் அதிகாரிகள் குழு முச்சக்கரவண்டியையும் சந்தேகநபர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர்.
மேலும், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வத்தளை மாபோல பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும் 25, 29 மற்றும் 30 வயதுடையவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.