இலங்கையின் முன்னாள் 7வது நிறைவேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐவர் இன்று டுபாய் ஊடாக அமெரிக்கா சென்றுள்ளனர்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ, மகன் தமிந்த மனோஜ் ராஜபக்ஷ, மருமகள் எஸ்.டி.ராஜபக்ஷ மற்றும் பேத்தி ஆகியோரே இவ்வாறு பயணித்துள்ளார்கள்.
இதன்படி, இக்குழுவினர் இன்று அதிகாலை 02.55 மணியளவில் எமிரேட்ஸ் விமானமான EK-649 இல் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் அறையினூடாக புறப்பட்டுள்ளனர்.
அத்தோடு, இக்குழுவினர் முதலில் துபாய் சென்று பின்னர் அமெரிக்கா செல்வதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தனர்.