கல்வி நிர்வாக சேவையில் சுமார் 800 உத்தியோகத்தர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை,வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை மிக விரைவில் நடத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளதோடு, அரசாங்கத்தின் புதிய ஓய்வூதியக் கொள்கையின் அடிப்படையில் டிசம்பர் 31ஆம் திகதி ஓய்வுபெறவுள்ள கல்வி அமைச்சின் அதிகாரிகளின் வெற்றிடங்களுக்கு பொருத்தமானவர்களை நியமிக்கவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.