ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகள் கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்தந்த நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்தில் கோவிட் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் மற்றும் நாட்டிற்குள் நுழைவதற்கு சோதனை அறிக்கைகள் எதிர்மறையாக இருக்க வேண்டும் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, இந்தியா ஏற்கனவே முகமூடி அணிவதை கட்டாயமாக்கியுள்ள நிலையில் மேலும், முறையான சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவது அவசியம் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், இப்போதும் கூட, இந்தியாவில் தினமும் 3,400 கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் பதிவாகுகிறார்கள் எனவும் ஆனால் இந்தியாவில் கோவிட் கடுமையாகப் பரவும் அபாயம் இல்லை என்று இந்திய நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.