சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கான முதல் கட்ட மானியம் அடுத்த ஆண்டு முதல் பாதியில் கிடைக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், முக்கிய நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை தற்போது வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தேர்தலை நடத்த வேண்டும் என்றால் அதற்கும் அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்ததோடு, இந்த வருடம் சர்வதேச நாணய நிதியத்தின் முதல் கட்ட மானியத்தை இலங்கை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்தாலும், அடுத்த வருடம் வரை அது தாமதமாகும் என்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.