இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளது.
அத்தோடு, தற்போது கொரோனா தொற்றுக்கள் பதிவாகியுள்ள வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கு சில பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், உலகம் முழுவதும், சீனாவில் இருந்து தோன்றிய புதிய வகையுடன் மீண்டும் கோவிட் பற்றி வலுவான விவாதம் நடந்தது வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை ஜனவரி 1ஆம் திகதி முதல் கட்டாயக் கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.