பெறப்பட்ட 11,000 விண்ணப்பங்களில் 10,360 விண்ணப்பங்களின் பணிகளை 2022ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் டபிள்யூ.ஏ. சரத் குமார தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த விண்ணப்பங்கள் தொடர்பான பல கொடுப்பனவுகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய விண்ணப்பங்களிலும் இது தொடர்பான பணப்பரிமாற்றங்கள் உடனடியாக தீர்க்கப்பட்டு வருவதாகவும், ஆவணங்களை அடுத்த சில வாரங்களில் பூர்த்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் டபிள்யூ.ஏ. சரத் குமார சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, இந்த வருடத்தில் மருத்துவ உதவிக்காக கிட்டத்தட்ட 1500 மில்லியன் ரூபா ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளதுடன் 08-01-2022 வரை, ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கப்பெற்ற 8210 விண்ணப்பங்கள் எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படாமல் குவிந்து கிடப்பதாகவும் குறித்த விண்ணப்பங்கள் தொடர்பான பணிகளை டிசம்பர் 31-ஆம்திகதிக்குள் முடிக்க வேண்டும் என ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் டபிள்யூ.ஏ. சரத் குமார பணிகள் துரிதப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவுதெரிவித்துள்ளது.