டிசம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் ஓய்வுபெறும் அரச ஊழியர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று பிற்பகல் விசேட கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.