தற்போதுள்ள பணவீக்கம் இந்த வருடத்தில் படிப்படியாக குறையும் என எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், புத்தாண்டை முன்னிட்டு கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று அஸ்கிரி மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களை தரிசனம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்த ஆண்டும் பொருளாதாரம் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருக்கும் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.