பிரேசிலின் புதிய அதிபரின் பதவியேற்பு விழா பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், புதிய ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட லுலா ட சில்வா நாட்டு மக்களுக்கு உரையாற்றியதுடன், மக்களுடன் இணைந்து நாடு மீண்டும் கட்டியெழுப்பப்படும் என அறிவித்துள்ளார்.
அத்தோடு, கடந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 50 வீதமும் 9 வாக்குகளும் பெற்று முன்னாள் அதிபர் பெரே போல்சனாரோவை தோற்கடித்து மூன்றாவது முறையாக நாட்டின் ஜனாதிபதியாக லுலா ட சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி. லூலா டா சில்வா 2003-2010 காலகட்டத்தில் பிரேசில் அதிபராக இருமுறை பதவி வகித்துள்ளார். ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டில் சிக்கிய லூலா ட சில்வாவுக்கு பிரேசில் நீதிமன்றம் பல ஆண்டுகளுக்கு முன்பு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் வழங்கி இருந்தது அதன் பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற பிரேசில் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார்.