சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜியோஜியேவா, கடந்த ஆண்டை விட 2023 ஆம் ஆண்டு முழு உலகிற்கும் பொருளாதார ரீதியாக மிகவும் கடினமான ஆண்டாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆண்டு உலகப் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கு பொருளாதார மந்தநிலையை சந்திக்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் எச்சரித்துள்ளதோடு, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனாவின் பொருளாதாரத்தின் மெதுவான வளர்ச்சியே இதற்குக் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜியோஜியேவா, உக்ரைன் போர், பொருட்களின் விலை உயர்வு, அதிக வட்டி விகிதங்கள் மற்றும் சீனாவில் கோவிட் பரவல் ஆகியவை இந்த ஆண்டு உலகப் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.