
யால தேசிய பூங்கா அண்மைக் காலத்தில் அதிக வருமானத்தைப் பதிவு செய்துள்ளது.
மேலும், யால தேசிய பூங்காவை பார்வையிட நேற்று வந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருமானம் மாத்திரம் 12.64179 கோடி ரூபாவாகும் என விவசாய, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு, யால தேசிய பூங்காவில் கடந்த டிசம்பர் 23ஆம் திகதி முதல் நேற்று வரையான 11 நாட்களின் போது கிடைத்த மொத்த வருமானம் ஆறு கோடியே எண்பத்து மூன்று இலட்சத்து 38,167 ரூபாவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, தென் மாகாணத்திற்கு அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் அவர்களில் பெருமளவானோர் யால பூங்காவிற்கு தினமும் வருகை தருவதாக விவசாய, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.