(எஸ்.அஷ்ரப்கான்)
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் “கணினி அறிவியல்” துறையின் தலைவராக கலாநிதி அஹமட் றிபாய் காரியப்பர் (03.01.2023) ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப் பட்டுள்ளார்.
இந்த நியமனத்தை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் கலாநிதி அஹமட் றிபாய் காரியப்பருக்கு வழங்கி வைத்தார்.
சிறந்த துறை சார்ந்த ஆற்றலும், சமூக சேவையில் ஈடுபாடும் கொண்ட கலாநிதி அஹமட் றிபாய் காரியப்பர் ஊடாக கணினி அறிவியல்” துறை சார் கல்வி மேம்பாடடையும் என பலரும் பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.