ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சதி மற்றும் கொலை குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நவ்பர் மௌலவி உட்பட 25 பிரதிவாதிகளின் பிணை கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தமித் தோட்டவத்த, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற குழாம் நிராகரித்துள்ளது.
மேலும், இந்த வேளையில் பிரதிவாதிகளை பிணையில் விடுவிப்பது பொருத்தமற்றது என நீதிவான் தமித் தோட்டவத்த இந்த உத்தரவை அறிவித்தார். அதன்படி, கோரிக்கைகளை நிராகரிக்கிறோம் என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதனையடுத்து வழக்கை மீண்டும் பெப்ரவரி 01ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.