தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் பஸ் சங்கங்களுக்கு இடையில் பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேலும், அண்மைய டீசல் விலை குறைப்பு தொடர்பில் பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் தமது நிறுவனத்தின் பரிந்துரைகள் இக்கலந்துரையாடலின் உண்மைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அண்மைய டீசல் விலை குறைப்புடன் ஒப்பிடுகையில், பஸ் கட்டணத்தை திருத்த முடியாது என தனியார் பஸ் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இது தொடர்பான விபரங்களை அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்றைய கலந்துரையாடலில் பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் பல யோசனைகள் முன்வைக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பேருந்துக் கட்டணங்கள் சிறிதளவு குறைக்கப்படும் போது பயணிகளுக்கு நன்மையை வழங்கும் வகையில் இலத்திரனியல் கட்டண அட்டையை அறிமுகப்படுத்துவது அத்தியாவசியமானது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் சுட்டிக்காட்டினார்.