இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக இருந்த சரித் சேனாநாயக்கவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அப்பதவியில் இருந்து நீக்குவதற்கு இலங்கை கிரிக்கெட் எடுத்த தீர்மானம் தொடர்பில் எழுத்துமூல விசாரணை நடத்தப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று காலை ஒளிபரப்பான வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே விளையாட்டுத்துறை அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய சரித் சேனாநாயக்க, இந்த விடையத்தை தாம் முன்னரே வெளிப்படுத்தியதாகவும், அப்போது அதிகாரிகள் இது தொடர்பில் உரிய கவனம் செலுத்தவில்லை எனவும் தெரிவித்தார்.
இதன்படி, வீரர்களின் அணி தெரிவு போன்ற விடயங்களில் இந்த மதவெறியர்கள் செல்வாக்கு செலுத்தினால் அது இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், அந்த அறிக்கை அவரை அந்த அணியின் மேலாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கு இலங்கை கிரிக்கெட் காரணமாக அமைந்ததுள்ளதாகவும் தெரிவித்தார்.