
இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட மின் கட்டண திருத்தத்தை ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்துவதற்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தொடர்ச்சியான மின்சார விநியோக உடன்படிக்கையின் அடிப்படையில் கட்டண திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இதன்படி, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட மின் கட்டண திருத்தத்தில் பொது பயன்பாட்டு ஆணைக்குழு திருத்தம் செய்தால் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.