இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கனேடிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் விழுந்து இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த 54 வயதுடைய நபர் தனது தாயாருடன் இன்று அதிகாலை 02.18 மணியளவில் கட்டாரின் தோஹாவிலிருந்து கட்டார் எயார்வேஸின் KR-662 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதேவேளை, கனடாவில் இருந்து தனது தாயாரை இலங்கைக்கு அழைத்து வரும் வேளையில் திடீரென மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை 03.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனைய மண்டபத்திலிருந்து வெளியேறச் சென்று கொண்டிருந்த நிலையில் மாரடைப்பால் இருந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இந்த விமானப் பயணியின் சடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளதோடு இவரின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதாகவும்தெரிவித்தார்.