மின்சார கட்டணம் தொடர்பில், பொறுப்புக்குரிய அமைச்சர் கஞ்சன விஜேசேகர அவர்கள் மின்சார சபையின் உயர் நிர்வாகம் மற்றும் பொறியியலாளர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
மேலும், மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட விலைக்கு ஏற்றவாறு மின் கட்டண திருத்தம், கணக்கீட்டிற்கு பயன்படுத்தப்படும் தரவுகள், தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதற்கான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் தெரிவித்த்துள்ளார்.
அத்தோடு, மின்சார சபையின் செலவுக் குறைப்புத் திட்டங்கள் மற்றும் முன்மொழிவுகள், எதிர்கால உற்பத்தித் திட்டங்கள், சப்ளையர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.