எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் எந்தக் கட்சியும் போட்டியிடாது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பான விடயங்கள் குறித்து ஒரு வாரத்திற்குள் தமக்கு அறிவிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்து குதிரை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மேலும், கிழக்கு மாகாணம், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சி மன்றங்களில் தமது கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் வை.ஏ.மொஹமட் சியா தெரிவிதுள்ளதோடு,. ஏனைய மாவட்டங்களில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு போட்டியிடுவது தொடர்பில் அந்தந்த மாவட்டங்களின் கட்சி அமைப்பாளர்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் போட்டியிட தேசிய காங்கிரஸ் இன்னும் சில தினங்களில் டெபாசிட் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். .
அத்தோடு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு யானை சின்னத்தில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாதகமான பல உள்ளூராட்சி மன்றங்களுக்கு யானை சின்னத்தில் போட்டியிடவும் இரண்டு கட்சிகளும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, உத்தர லங்கா கூட்டமைப்பு, சுதந்திர ஜனதா சபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட சுயேச்சைக் குழு ஆகியவை சுதந்திர மக்கள் முன்னணியின் சின்னமாக ஹெலிகொப்டரை தெரிவு செய்வதில் கவனம் செலுத்தி வருவதாக இன்று காலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று பிற்பகல் கைச்சாத்திடப்பட உள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக 08 அரசியல் கட்சிகளும் 11 சுயேட்சைக் குழுக்களும் நேற்று பிற்பகல் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்றும், பல உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக பல தரப்பினர் பிணைப் பணத்தை டெபாசிட் செய்ய உள்ளனர். இதன்படி, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கான பிணைத் தொகை அந்தந்த மாவட்ட செயலகங்களில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
இதன்படி, அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களும் இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதோடு, உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக. தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் அறிவிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவா கலந்துரையாடல் ஆரம்பிப்பதற்கு முன்னர் எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.