எரிபொருள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை உள்ளிட்ட பல காரணங்களால் சுகாதார சேவைகளை பேண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், சுற்று நிருபங்கள் ஊடாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு எதிராக தமது உறுப்பினர்கள் தொழில்முறை நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.