தேர்தல் பிரிவு எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை திட்டமிட்ட திகதியில் அரசாங்கத்திடம் வழங்குவது சாத்தியமில்லை என அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேலும், வரையறுக்கப்பட்ட குழு அறிக்கை பெப்ரவரி 28 ஆம் திகதி வழங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளதால் குழுவின் அறிக்கை தாமதமாகும் என அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அத்தோடு, 8 ஆயிரத்தைத் தாண்டிய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4 ஆயிரமாகக் குறைக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கைத் தீர்மானத்துடன், தொகுதி எல்லை நிர்ணய ஆணைக்குழுவாக மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான எல்லை நிர்ணய குழு நியமிக்கப்பட்டதாகவும் மேலும், தெரிவித்தார்.