
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் சமந்தா ஸ்டீபன் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், மாவனெல்லை நகரில் கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்குவதற்காக குறித்த சந்தேகத்திற்குரிய தலைவர் இலஞ்சம் பெற முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, மாவனல்லை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வர்த்தகர் ஒருவரிடம் இலஞ்சம் பெறுவதற்கு தயாரான மாவனல்லை உள்ளுராட்சி மன்றத் தலைவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.