இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை இராணுவத்தின் அங்கீகரிக்கப்பட்ட பலம் தற்போது 200,783 ஆக இருந்தாலும், 2024 ஆம் ஆண்டளவில் மொத்த மதிப்பிடப்பட்ட பலத்தை 135,000 ஆக குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி,தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இலங்கையின் தேசிய பாதுகாப்புத் தேவைகளுக்கு ஏற்ப எந்தவொரு பாதுகாப்புச் சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் 2030 ஆம் ஆண்டுக்குள் மூலோபாய மற்றும் தொழில்நுட்ப ரீதியில் தகுதிவாய்ந்த சமச்சீர் இராணுவத்தை உருவாக்குவதே இலங்கை ஆயுதப் படைகளின் மூலோபாயத் திட்டத்தின் ஒட்டுமொத்த நோக்கமாகும் என்று அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், தெரிவிக்கப்பட்டுள்ளது.