ஒரே கொள்கை கட்டமைப்பிற்குள் செயற்பட்டு நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்காக அரச துறைகள் மாத்திரமன்றி ஏனைய துறைகளையும் ஒன்றிணைக்க வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களுக்கு பொருளாதார நிவாரணங்களை வழங்குவதில் தான் முதலில் கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகளுக்கு தீர்வு காண எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இக்கலந்துரையாடலில் இணைந்துகொண்ட நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.