ஊழலற்ற நபர்களை கொண்டு நாட்டை கட்டியெழுப்ப தான் தயார் என வாதுவ பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளதோடு தனது வேலைத்திட்டத்திற்கு அதிக இளைஞர்களை திரட்டவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் இன்று கட்டுப்பணம் செலுத்தி கையொப்பமிட்டன.
மேலும், கண்டி மாவட்டத்தில் உள்ள 22 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களில் கையொப்பமிடும் நிகழ்வு இன்று கண்டியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.