68 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்களுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதாக நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், எட்டி விமான சேவைக்கு சொந்தமான இந்த விமானம் நேபாளத்தின் பொக்காராவில் இருந்து காத்மாண்டு நோக்கி பயணித்த போது இந்த விபத்துக்குள்ளானதாக கூறப்படுகின்றது.
இதன்படி, விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.