60,000 மெட்ரிக் டன் நிலக்கரியினை ஏற்றிக் கொண்டு 08வது கப்பலும் இன்றுகாலை 08.23 மணியளவில் இலங்கையை வந்தடைந்ததாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு, நிலக்கரி ஏற்றிச் செல்லும் 09ஆவது கப்பல் எதிர்வரும் 18 ஆம் திகதியும், 10ஆவது கப்பல் 19ஆம் திகதியும் இலங்கையை வந்தடையும் எனவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், கடந்த டிசம்பர் மாதம் முதல் இலங்கைக்கு வந்துள்ள நிலக்கரி கப்பல்களின் எண்ணிக்கை 08 ஆகும் எனவும் இந்த வருடம் ஜனவரி மாதத்தில் மாத்திரம் நிலக்கரி ஏற்றிச் செல்லும் 07 கப்பல்கள் தமக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.