சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு தற்போதுள்ள உள்ளூராட்சி மன்றங்களை கலைக்க வேண்டும் என பஃபரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், சில உள்ளுராட்சி மன்றங்களின் வளங்கள் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, தேர்தல் நடத்தப்படுமா? இல்லையா என்பதை பொதுமக்கள் தீர்மானிக்க வேண்டும் என அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய குழு உறுப்பினர் வசந்த சமரசிங்கவும் கருத்து வெளியிட்டுள்ளார்.