13வது அரசியலமைப்பு திருத்தத்தை அடுத்த சில வருடங்களில் அமுல்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், யாழ்ப்பாணத்தில் இன்று (15) இடம்பெற்ற தைப்பொங்கல் தேசிய விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்ர்த்துள்ளார்.
இதன்படி, “இப்போது 13வது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முயற்சிப்பதாகவும் இத்திருத்தத்தினை வடக்கில் மாத்திரமல்லாமெல் தென்னிலங்கை முதலமைச்சர்களும் இதனை அமுல்படுத்துமாறு கேட்பதாகவும்.
மேலும், அது தொடர்பில் ஜனாதிபதி பேசி செயற்பட உள்ளதோடு . அடுத்த இரண்டு வருடங்களில் இது திட்டவட்டமாக தொடரும் என்றும் தெரிவித்தார்.
அத்தோடு, இன்றைய வறுமை, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம், தமிழர்களோ, சிங்களவர்களோ மட்டுப்படுத்தப்படவில்லை.எல்லோரும் கஷ்டப்படுவதக்கவும் எல்லோரும் ஒன்றுபட்டு வெளியே வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.
எனவே, இன்று பிரச்சனைகள் மட்டும் இல்லை. வடக்கில் உள்ள மக்கள், வேறு சில விடயங்கள் பேசப்பட உள்ளன.எனவே இந்த கலந்துரையாடலின் பின்னர் நான் குறிப்பாக மலையக மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் பாராளுமன்ற கட்சிகளின் தலைவர்களையும் அழைத்து இரண்டாவது சுற்று கலந்துரையாடல்களினை ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மலையக மக்களுக்கு எமது ஏனைய சமூகங்களான சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அனுபவிக்கும் அதே உரிமைகளையும் நன்மைகளையும் அவர்களுக்கு வழங்க முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி தனதுரையில் தெரிவித்தார்.