பிலியந்தலை, பலன்வத்த பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரால் யுவதியொருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் பிலியந்தலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த சிறுமியை கடத்திச் சென்றது மெதவாச்சிய பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான கடற்படை சிப்பாய் ஒருவர் என தெரியவந்துள்ளது.
அத்தோடு, கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இருவருக்குமிடையிலான உறவை நிறுத்தியிருந்ததாகவும், அதன் பின்னர் குறித்த சிறுமியை சந்தேக நபர் பல சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.