சுதந்திர மக்கள் முன்னணியின் விசேட செயற்குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
மேலும், அண்மையில் வட இலங்கை கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் உட்பட 12 கட்சிகள் இணைந்து ஹெலிகொப்டர் அடையாளத்தில் சுதந்திர மக்கள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
அத்தோடு, சுதந்திர மக்கள் முன்னணியின் நிறைவேற்று சபைக் கூட்டம் இன்று மாலை 6.00 மணிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி, எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளிப்பது தொடர்பில் கட்சிகளுக்கு இடையில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவுள்ளதாகவும்ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறத் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணியில் இருந்து விலகி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது தொடர்பிலும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.