ஹம்பாந்தோட்டை மாவட்டம் மற்றும் நாடளாவிய ரீதியில் போசாக்கு குறைபாட்டை அம்பலப்படுத்திய வைத்தியர் சமல் சஞ்சீவவின் பணி இடைநிறுத்தம் தொடர்பில் சபாநாயகரின் ஒப்புதலுக்கு உட்பட்டு சுகாதார அமைச்சின் அறிக்கையை வரவழைக்க பாராளுமன்ற பொது மனுக்கள் குழு தீர்மானித்துள்ளது.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன சமர்ப்பித்த மனு அறிக்கையின் பிரகாரம், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு சபாநாயகர் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற மனுக்கள் குழு முன்னர் தெரிவித்திருந்தது.
இதன்படி, வைத்தியர் சமல் சஞ்சீவவின் பணி இடைநிறுத்தம் தொடர்பில் சுகாதார அமைச்சிடம் அறிக்கை கோருவதற்கு நாடாளுமன்றத்தின் மனுக்கள் குழு தீர்மானித்துள்ளது.
மேலும், சுகாதார அமைச்சின் செயலாளர் கடந்த வருடம் நவம்பர் மாதம் வைத்தியர் சமல் சஞ்சீவவை பணி இடைநிறுத்தம் செய்து, ஊட்டச்சத்தின்மை அபிவிருத்தி தொடர்பில் வைத்தியர் சமல் சஞ்சீவவினால் வெளியிடப்பட்ட அம்பலத்தினால் அரசாங்கம் தர்மசங்கடமடைந்ததாகவும் சுகாதார அமைச்சுக்கு பாதகமான நிலை ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தமை முக்கிய விடையமாகும்.