அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவது தொடர்பாக நேற்று கூடிய அமைச்சரவையில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நிறைவேற்று அதிகாரமற்ற அரசாங்க ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை உரிய திகதியில் வழங்குவதற்கும், நிறைவேற்று தர அரச ஊழியர்களுக்கு உரிய திகதிக்கு சில நாட்களுக்குப் பின்னர் சம்பளம் வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும், 2023 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் புதிய வருவாய் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது தொடங்கியுள்ளதோடு, இதன் மூலம் கிடைக்கும் வருவாயை வசூலிக்க சிறிது காலம் எடுக்கும் என்பதால், ஜனவரி முதல் அடுத்த சில மாதங்களுக்கு அரசாங்கத்தின் செலவினங்களை வரம்புகளுக்கு இணங்க நிர்வகிக்க வேண்டும் என்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.