புதிய நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வளர்ச்சி, நலத்துறை மற்றும் கிராம அலுவலர்கள் உரிய விவரங்களை சேகரிப்பதில் இருந்து விலகியதே இதற்கு காரணம் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் பல உத்தரவுகள் காரணமாக அதிகாரிகள் இவ்வாறான தீர்மானத்தை எடுத்துள்ளதாக அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.