பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகவினை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபரின் பிணை கோரிக்கை மீதான உத்தரவு அன்றைய தினம் அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார் .
மேலும், பிணை கோரிக்கை தொடர்பில் எழுத்துமூல உரைகள் இருப்பின் அவற்றை எதிர்வரும் 24ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறும் தேரரிவிக்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.