ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஸ்தாபிக்கப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்குக்கான தேசிய கூட்டுப் பொறிமுறைக்கு 174 மில்லியன் ரூபா பெறுமதியான பால் மாவை பொருளாதார ரீதியாக சிரமத்திற்கு உள்ளான 70,000 குடும்பங்களுக்கு வழங்குவதற்கு நிறுவனமொன்று நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், நிறுவனம் உத்தியோகபூர்வமாக பால் மாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் கையளித்ததோடு மாவட்டச் செயலகங்கள் ஊடாக நாடு முழுவதிலும் பொருளாதார சிரமங்களுக்கு உள்ளாகியுள்ள இனங்காணப்பட்ட 70,000 குடும்பங்களுக்கு இந்தப் பால் மாக்கள் வழங்கப்பட உள்ளன.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தேசிய உணவு பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி குழுவின் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான கலாநிதி சுரேன் படகொட பேசுகையில், ஒவ்வொரு குடிமகனும் தேவையான ஊட்டச்சத்தை பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் உணவு பாதுகாப்பு திட்டத்தின் தொலைநோக்குப் பார்வையாகும் என தெரிவித்தார்.
மேலும், மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களின் போசாக்கு தேவைகளுக்கு ஆதரவளிப்பதே ஆரம்பக்கட்ட நடவடிக்கையின் நோக்கங்களாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.