பாராளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாராச்சி மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் புதிய அமைச்சரவை அமைச்சர்களாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சில நிமிடங்களுக்கு முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான அமைச்சரவை அமைச்சராக ஜீவன் தொண்டமான் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.