ஈஸ்டர் தாக்குதலின் போது பாதுகாப்பு படையினர் செயற்பட்ட விதம் மற்றும் மே 9 மற்றும் ஜுலை 9 தொடர் சம்பவங்கள் தொடர்பிலும் சிக்கல்கள் இருப்பதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், தேர்தலில் போட்டியிட முன்மொழியப்பட்ட வேட்பாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், தேர்தல் காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்பு தரப்பினர் கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, அமைச்சர் சுசில் பிரேமஜயன், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோரினால் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணை அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்பிப்பது தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடப்பட்டது.
மேலும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான நட்டஈடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட வழக்கு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் பாராளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பினார்.
இதற்கிடையில், ஓய்வூதியம் வளங்குவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் தினேஷ் குணவர்தன கடன் பெற்றாவது திட்டமிட்டபடி ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
ஓய்வூதியம் பெறுவோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
மேலும், தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.