கலேவெல பிரதேசத்தில் வெறிச்சோடிய வீடொன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் 14 வயதுடைய பாடசாலை மாணவி மற்றும் 20 வயதுடைய இளைஞன் ஒருவரின் சடலங்களை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
மேலும் , இருவருக்கும் இடையே சில காலமாக காதல் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் முன்னதாக இருவரும் வீட்டை விட்டு ஓடிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கலேவெல பகுதியில் உள்ள வீடொன்றில் தூக்கிட்டு உயிரிழந்த இந்த இருவரின் மரணம் கொலையா இல்லை தற்கொலையா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.