இலங்கையில் பொதுப் பண மேலாண்மை மிகவும் பாரதூரமானதாக மாறியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும், செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர், அரசாங்க செலவினங்களுக்காக கிடைக்கக்கூடிய தொகை கூட மிகவும் குறைவாகவே உள்ளது என தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்த ஆண்டு நாட்டின் நிதி நிலைமை மிகவும் பலவீனமாக இருக்கலாம் என நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.