உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தற்போது நடைபெற்று வரும் வேட்புமனு பரிசீலனைக்கு பிறகு மாவட்ட செயலாளர்களால் வேட்புமனுக்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று மதியம் 12.30 மணியுடன் நிறைவடைந்தது.